search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மொபட் மீது கார் மோதில்"

    திருச்செங்கோடு அருகே இன்று மொபட் மீது கார் மோதிய விபத்தில் ரிக் வண்டி டிரைவர் பலியானார்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே ஊஞ்சனையை அடுத்த குட்டிக்காபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செங்கோட்டுவேல் (வயது 53), ரிக் வண்டி டிரைவர்.

    இன்று காலை இவர் ஊஞ்சனையில் இருந்து குட்டிக்காபாளையத்திற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். நாமக்கல் - திருச்செங்கோடு 4 வழிச்சாலையில் குட்டிக்காபாளையம் பிரி வில் செங்கோட்டுவேல் வலதுபுறம் செல்வதற்காக தனது மொபட்டை திருப்பினார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் மொபட் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த செங்கோட்டுவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து பற்றி அறிந்ததும் திருச்செங்கோடு ரூரல் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செங்கோட்டுவேல் பிணத்தை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் குட்டிக்காபாளையம் பிரிவு பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதாகவும், ரோட்டின் நடுவில் உள்ள தடுப்பு சுவர் உயரமாக இருப்பதால் இதுபோன்ற விபத்துக்கள் நிகழ்வதாகவும் கூறி அப்பகுதி பொதுமக் கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இனிமேல் விபத்தை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து கிராம மக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்த விபத்து சம்பவத்தை தொடர்ந்து காரை ஓட்டி வந்த பரமத்திவேலூர் இருக்கூர் பகுதியைச் சேர்ந்த அருள்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் திருப்பூரில் கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×